டென்னிஸ்: ஆடுகளத்தைச் சேதப்படுத்தியதாக செரீனா வில்லியம்சுக்கு $13,500 அபராதம்  

லண்டன்: விம்பிள்டன் டென்­னிஸ் போட்டியின்போது ஆடு­களத்தைச் சேதப்படுத்தியதாக அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்­சுக்கு 10,000 அமெரிக்க டாலர் (S$13,500) அபராதம் விதிக்­கப்­பட்டுள்ளது.

கிராண்ட் ஸ்லாம் போட்டி­களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடை­பெற்று வருகிறது.

இதில், ஏழு முறை விம்பிள்டன் வெற்றியாளர் பட்டம் பெற்ற மூத்த வீராங்­கனை­யான செரீனா வில்லி­ யம்ஸ், காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

முன்னதாக பயிற்சி போட்டியின் போது ஆடு­களத்தை அவர் சேதப்­படுத்தி­ய­தாகப் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட ‘ஆல் இங்கி­லாந்து கிளப்’ அமைப்பானது, செரீனா வில்லியம்சின் கோபச் செயலுக்­காக அவருக்கு அப­ராதம் விதிக்க முடிவெடுத்தது. ஆட்டங்களின் போது அடிக்கடி கோபத்தை வெளிப்படுத்துபவர் செரீனா.

இந்நிலையில், மற்றோர் ஆட்டத்­தில் தோல்வியுற்ற பின்னர் செய்தி­ யாளர்களிடம் பேசிய இத்தாலிய வீரர் ஃபேபியோ ஃபோக்னினி, விம்பிள்டன் தொட­ரில் “குண்டு­வெடிக்க வேண்டும்” என்று ஆவே­ சமாகக் கூறியதால் அவருக்கு 3,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!