லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின்போது ஆடுகளத்தைச் சேதப்படுத்தியதாக அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சுக்கு 10,000 அமெரிக்க டாலர் (S$13,500) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
இதில், ஏழு முறை விம்பிள்டன் வெற்றியாளர் பட்டம் பெற்ற மூத்த வீராங்கனையான செரீனா வில்லி யம்ஸ், காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக பயிற்சி போட்டியின் போது ஆடுகளத்தை அவர் சேதப்படுத்தியதாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட ‘ஆல் இங்கிலாந்து கிளப்’ அமைப்பானது, செரீனா வில்லியம்சின் கோபச் செயலுக்காக அவருக்கு அபராதம் விதிக்க முடிவெடுத்தது. ஆட்டங்களின் போது அடிக்கடி கோபத்தை வெளிப்படுத்துபவர் செரீனா.
இந்நிலையில், மற்றோர் ஆட்டத்தில் தோல்வியுற்ற பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய இத்தாலிய வீரர் ஃபேபியோ ஃபோக்னினி, விம்பிள்டன் தொடரில் “குண்டுவெடிக்க வேண்டும்” என்று ஆவே சமாகக் கூறியதால் அவருக்கு 3,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.