கங்குலி: கொரோனா சிகிச்சைக்காக வீரர்களின் அறையை வழங்கத் தயார்

மும்பை: கொரோனா கிருமி தாக்­கம் இந்­தி­யா­வில் அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது. தற்­போது வரை இந்­தியா முழு­வ­தும் இந்த கிருமித் தொற்றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை பன்­ம­டங்­கா­கப் பெரு­கிக்­கொண்­டுள்­ளது. இன்­னும் அதி­க­ரிக்­கும் என அஞ்­சப்­ப­டு­வ­தால் ஒவ்­வொரு மாநில அர­சு பாதிக்­கப்­பட்­ட­வர்­களை தனி­மைப்­ப­டுத்தி சிகிச்சை அளிப்­ப­தற்கு ஏற்ற வகை­யில் படுக்­கை­களை அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது.

மேற்கு வங்­கா­ளத்­தி­லும் கொரோனா கிருமி தொற்றி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. ஒரு­வேளை சிகிக்சை அளிக்க இடம் தேவை என்­றால் ஈடன் கார்­டன் மைதா­னத்­தில் வீரர்­கள் தங்­கு­வ­தற்­காக கட்­டப்­பட்­டுள்ள அறை­களை வழங்­கத் தயா­ராக இருக்­கி­றோம் என பிசி­சிஐ தலை­வர் சவு­ரவ் கங்­குலி தெரி­வித்­துள்­ளார்.

இது­கு­றித்து அவர் கூறு­கை­யில் “அரசு எங்­க­ளி­டம் கேட்­டால், நாங்­கள் கொடுப்­ப­தற்­காக தயா­ராக உள்­ளோம். இந்த நேரத்­தில் இருந்து எது தேவை­யென்­றா­லும் அதைச் செய்ய இருக்­கி­றோம். இதில் எந்­த­வித பிரச்­சினை­யும் இல்லை,” என்­றார். சவு­ரவ் கங்­குலி பிசி­சிஐ தலை­வ­ரா­கப் பதவி ஏற்­ப­தற்கு முன் பெங்­கால் கிரிக்­கெட் சங்­கத்­தின் தலை­வ­ராக இருந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஏற்­கெனவே புதுச்­சேரி மாநில கிரிக்­கெட் சங்­கம் இது­போன்ற அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!