ரியாத்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் எதிர்பாராவிதமாக அர்ஜென்டினாவை வென்றது சவூதி அரேபியா.
அந்த வெற்றியைக் கொண்டாட சவூதி அரேபிய மன்னர் ஒருநாள் பொது விடுமுறை அறிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் நேற்று பொது விடுமுறை. நேற்று முன்தினம் நடைபெற்ற 'சி' பிரிவு ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது சவூதி அரேபியா. அது, உலகக் கிண்ண வரலாற்றில் இதுவரை காணாத பெரிய அதிர்ச்சி.
தோல்விக்குக் காரணம் ஏதும் சொல்லமுடியாது என்று அர்ஜெண்டினா நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி தனது அணியினரிடம் கூறியுள்ளார். பின்னடைவைச் சரிவரக் கையாண்டால் போட்டியில் அர்ஜெண்டினாவால் மீண்டுவரமுடியும் என்றும் மெஸ்ஸி குறிப்பிட்டார்.