ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க மேல் முறையீடு

சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக அதன் உரிமையாளரான வேதாந்தா குழுமம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. முன்னதாக அந்த வழக்கை விசாரித்த இந்திய பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க கடந்தாண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டபோதும் அதனை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நிறுத்தி வைத்தது. இதனைத் தொடர்ந்து வேதாந்தா குழுமம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்தது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் மூடுவதற்கான உத்தரவு சட்டவிரோதமானது என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் வேதாந்தா குழுமம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

கடந்தாண்டு மே மாதத்தில் சுற்றுப்புறத் தூய்மைக்கேட்டுக்கு எதிராக வெடித்த ஆர்ப்பாட்டத்தில் 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்தச் சம்பவம் அப்போது முதல் தமிழகத்தில் அரசியல் மற்றும் சமய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்தியப் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் இந்நேரத்தில் ஆலை மீண்டும் திறக்கப்படாது என்று அரசியல் கவனிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!