மதுரை: விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள்களைத் திருடி அவற்றை ஆசை தீர ஓட்டிப் பார்த்துவிட்டு பிறகு திருடிய இடத்திலேயே அவற்றைத் திருப்பி வைத்துவிடும் விநோத திருடர் கடைசியில் போலிசாரிடம் சிக்கினார்.
மதுரை நகரின் பல பகுதிகளி லும் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள்கள் அடிக்கடி திருட்டுப் போயின. எல்லா திருட்டுச் சம்பவங்களும் ஒரே மாதிரியாக இருந்ததால் போலிசார் யாரோ ஒருவர்தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என்று விசாரணையை முடுக்கிவிட்டனர். ஆனால் இதில் துப்பு துலங்காமலேயே இருந்து வந்தது. என்றாலும் கடைசியில் ஒரு பிரத்தியேகப் படச்சாதனம் மூலம் 21 வயது ஆடவர் மீது போலிசுக்கு சந்தேகம் வந்தது.
நவீன் குமார் என்ற அந்த ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள்களை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையால் குமார் இத்தகைய காரியங்களைச் செய்ததாகத் தெரியவந்துள்ளது.