பட்டாசு வெடித்ததில் வாகனத்தில் சென்ற தந்தை-மகன் மரணம்

பட்டாசு வெடித்ததில் வாகனத்தில் சென்ற தந்தை-மகன் மரணம்

1 mins read
7a37b292-0163-42a6-a2c2-33c1fddd28a3
-

புதுச்­சேரி: புதுச்­சேரி அரி­யாங்­குப்­பம், காக்­க­யான் தோப்பு பகு­தி­யைச் சேர்ந்­த­வர் கலை­நே­சன், 37. இவர் தமிழ்­நாட்­டில் மரக்­கா­ணம் அருகே உள்ள கூனி­மேட்­டில் வசிக்­கும் தனது மனைவி ரூப­னாவை, 34, தீபா­வளி அன்று பிற்­ப­க­லில் பார்த்­து­விட்டு, தனது ஏழு வயது மகன் பிர­தீ­சு­டன் இரு­சக்­கர வாக­னத்­தில் இரண்டு சாக்கு மூட்­டை­களில் நாட்டு பட்­டா­சு­களை ஏற்­றிக்­கொண்டு புதுச்­சேரி நோக்­கித் திரும்­பிக்ெ­காண்­டி­ருந்­தார்.

அப்­போது, கோட்­டக்­குப்­பம் பகு­தி­யில் எதிர்­பா­ராத வித­மாக நாட்­டுப் பட்­டா­சு­கள் திடீ­ரென வெடிக்க ஆரம்­பித்­துள்­ளன.

இந்த எதிர்­பா­ராத சம்­பவத்­தில் தந்­தை­யும் மக­னும் உயி­ரி­ழந்­த­னர். அத்­து­டன், அரு­கில் இருந்த வாக­னங்­களும் வீட்­டின் கூரை­களும் சேத­ம­டைந்­தன.

இந்த வெடி­வி­பத்து நடை­பெ­ற்ற போது சாலை­யின் மற்­றொரு பக்­கம் இரு சக்­கர வாக­னத்­தில் வந்து கொண்­டி­ருந்த ஷர்­பு­தீன், கணே­சன் ஆகிய இரு­வ­ரும் படு­கா­ய­ம­டைந்­த­னர். இவர்­கள் ஜிப்­மர் மருத்­து­வ­மனைக்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். விசா­ரணை நடக்­கிறது.