புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பம், காக்கயான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன், 37. இவர் தமிழ்நாட்டில் மரக்காணம் அருகே உள்ள கூனிமேட்டில் வசிக்கும் தனது மனைவி ரூபனாவை, 34, தீபாவளி அன்று பிற்பகலில் பார்த்துவிட்டு, தனது ஏழு வயது மகன் பிரதீசுடன் இருசக்கர வாகனத்தில் இரண்டு சாக்கு மூட்டைகளில் நாட்டு பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கித் திரும்பிக்ெகாண்டிருந்தார்.
அப்போது, கோட்டக்குப்பம் பகுதியில் எதிர்பாராத விதமாக நாட்டுப் பட்டாசுகள் திடீரென வெடிக்க ஆரம்பித்துள்ளன.
இந்த எதிர்பாராத சம்பவத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்தனர். அத்துடன், அருகில் இருந்த வாகனங்களும் வீட்டின் கூரைகளும் சேதமடைந்தன.
இந்த வெடிவிபத்து நடைபெற்ற போது சாலையின் மற்றொரு பக்கம் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஷர்புதீன், கணேசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விசாரணை நடக்கிறது.