சென்னை: சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வழக்கு தொடர் பில், எண்ணூர் காவல் ஆய்வாளர், பாஜக பிரமுகர் உள்ளிட்ட 21 பேரை குற்றவாளிகள் என 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி வழக்கை விசாரித்து, 21 பேரைக் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.
தீர்ப்பின் விவரங்கள் இம்மாதம் 19ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்குத் தொடர்பில், குற்றம்சாட்டப்பட்ட 26 பேரில் நால்வர் காணாமல் போயுள்ளனர். ஒருவர் உயிரிழந்துவிட்டார். மீதமுள்ள 21 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.
கடந்த 2020ல் சிறுமியைப் பாலி யலில் ஈடுபடுத்தியதாக சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, அவருக்கு உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ் உள்ளிட்ட 26 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு, அவர்களில் 21 பேர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைதாகினர்.
கைதான தரகர் ராஜேந்திர னிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஏழைச் சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதையும் பல துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு சிறுமிகளை அனுப்பி வைத்ததையும் ஒப்புக்கொண்டார்.