பீகாா் சட்ட மேலவைத் தோ்தல்: நிதீஷ் குமார், ராப்ரி தேவி போட்டியின்றி தோ்வு

பாட்னா: பீகார் மாநில சட்ட மேலவையில் உள்ள 11 இடங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இம்முறை தேர்தலில் போட்டியிட்ட பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 11 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தொடர்ந்து 4வது முறையாக மாநில சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாநிலத் தலைமைச் செயலகத்திற்குச் சென்று அவர் தனது சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.

இதேபோல் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் லாலு பிரசாத்தின் மனைவியுமான ராப்ரி தேவி, மாநில அமைச்சர் சந்தோஷ் சுமன், முன்னாள் அமைச்சர் மங்கள் பாண்டே உள்ளிட்டோர் சட்ட மேலவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி தினம் நிறைவடைந்த நிலையில், மனுத் தாக்கல் செய்த 11 பேரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!