7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தாய் தெய்வ வழிப்பாட்டு கற்சிலை கண்டெடுப்பு

செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிருப்பாக்கம் பகுதியில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தாய் தெய்வ வழிப்பாட்டு கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் சந்திரசேகர் தலைமையில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தாயை முதன்மைப்படுத்தும் சமூகத்தில் இத்தகைய வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ள பேராசிரியர் சந்திரசேகர், தற்போது கண்டெடுக்கப்பட்ட சிலை ஐந்தரை அடி உயரமும், மூன்றரை அடி அகலமும் உள்ளது என்றார்.

பெரிய கல்லில் தாய் தெய்வ உருவம் செதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

“தற்போதுள்ள சிலைகள் போல் தெளிவாக இல்லாமல், கைகள், பாம்புகள் போன்று வளைந்துள்ளன. விரல்கள் தனித்தனியாகக் காட்டப்பட்டுள்ளன. இது தொடக்ககால சிற்பங்களில் ஒன்றாக இருக்கக்கூடும்,” என்றார் சந்திரசேகர்.

இப்பகுதியில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!