தேசிய தின அணிவகுப்பின் இரண்டாம் அங்கம் இன்று இரவு 8.15 மணிக்குத் தொடங்கியது. பாடாங்கில் இன்று காலை நடந்தேறிய முதல் அங்கத்தைப் போல ஸ்டார் விஸ்டா மேடைக்கலை நிலையத்தில் அரங்கேறும் இந்த அங்கத்தில் 150 பார்வையாளர்களே அனுமதிக்கப்பட்டனர்.
இரவு 7 மணிக்குத் தொடங்கிய கலைநிகழ்ச்சியில் பல்வேறு மொழிகளில் நாட்டுப்பற்றுப்பாடல்களைப் பாடிய கலைஞர்களுடன் இணைந்த பல வண்ண ஒளி நிகழ்ச்சியும் உயிரோவிய அம்சங்களும் இடம்பெற்றன.
கொவிட்-19 கிருமிப்பரவலை எதிர்கொண்ட சிங்கப்பூரர்களின் அனுபவங்களைப் பற்றியும் இந்நிகழ்ச்சியின்போது விளக்கப்பட்டன.
தேசிய பற்றுறுதி இரவு சுமார் 8.20 மணி எடுக்கப்படும். அதன்பிறகு பார்வையாளர்கள் தங்களது கைப்பேசிகளிலுள்ள மின்-பந்தங்களை அசைத்து ‘ சிவப்பு விண்மீன் அலைகளை’ப் போன்ற ஒரு தோற்றத்தை உண்டாக்கினர். இறுதியாக இந்தக் கொண்டாட்டங்கள், சிங்கப்பூரிலுள்ள 10 வெவ்வேறு குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்படும் வாணவேடிக்கைகளுடன் நிறைவடைந்தன.