அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 0.68 விழுக்காடு சரிந்து வரலாறு காணாத அளவாக 81.55க்கு வீழ்ச்சியடைந்தது.
கொவிட்-19 கொள்ளை நோய்க்குப் பிறகு உலகப் பொருளியல் மீண்டு வரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரஷ்யா-உக்ரேன் போர், அதனால் அதிகரித்த பொருள்களின் விலை உயர்வு, பணவீக்கம் போன்றவை அந்த எதிர்பார்ப்பைக் குறைத்துவிட்டன.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் முதல் சீனா வரை பொருளியல் நெருக்கடி ஏற்படலாம் என்று பொருளியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மத்திய வங்கியின் வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன.
அமெரிக்காவின் மத்திய வங்கி மூன்றாவது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது.
இந்தியாவின் ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது.
தற்போது இந்தியாவின் பணவீக்கம் ஏழு விழுக்காடாக உள்ளது.
ஆனால் இதனை ஆறு விழுக்காடாக வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்காக உள்ளது.
இந்த நிலையில் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
இதற்கிடையே இங்கிலாந்தின் புதிய அரசாங்கம் கடந்த வாரம் பல்வேறு வரிச்சலுகைகளை அறிவித்ததால் பவுண்டின் மதிப்பும் சரிந்தது.
டாலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு 4.9 விழுக்காடு குறைந்து $1.03க்கு சரிந்தது. பின்னர் 1.05 டாலருக்கு நிலைபெற்றது. இது, முந்தைய பரிவர்த்தனை முடிவுற்ற போது இருந்த நிலையுடன் ஒப்பிடு கையில் 2.9 விழுக்காடு குறை வாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை பவுண்டின் மதிப்பு மொத்தம் 3.6 விழுக்காடு சரிந்தது.
பொருளியல் வளர்ச்சியைத் தூண்டுவதற்காக பிரிட்டனின் புதிய நிதி அமைச்சர் குவாசி குவார்டெங், வரிச்சலுகைகளையும் முதலீட்டு ஊக்குவிப்புகளையும் அறி வித்தார்.
இது, பவுண்டின் மதிப்பை பாதிக்கச் செய்துள்ளது.
சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான பவுண்டின் மதிப்பு நேற்று காலை 11.00 மணி நிலவரப்படி 2.89 விழுக் காடு குறைந்து S$1.5079ஆனது.
இவ்வாண்டில் சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான பவுண்டின் மதிப்பு சுமார் 17 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.