கோலாலம்பூர்: மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலக் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் ஜனவரி 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை செரெம்பன், நிலாய், போர்ட் டிக்சன் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள 19 வளாகங்களில் சோதனை நடத்தினர்.
அச்சோதனையில் பங்களாதேஷைச் சேர்ந்த 15 பேர், இந்தோனீசியாவைச் சேர்ந்த 50 பேர், இந்தியாவைச் சேர்ந்த இரு ஆடவர்கள், மியன்மாரைச் சேர்ந்த 10 நபர்கள் உட்பட மொத்தம் 80 பேரைச் சட்டவிரோதமாக குடியேறிய குற்றத்திற்காக அந்நாட்டுக் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டுக் குடிநுழைவுத் துறை இயக்குநர் கெனித் தான் ஐ கியாங் தெரிவித்தார்.
இச்சோதனையில் 17 அதிகாரிகள் ஈடுபட்டத்தாகவும் 161 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
கைது செய்யப்பட்ட 80 பேர்மீது அந்நாட்டுக் குடிநுழைவுச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.
விசாரணைகளுக்கு முன்னிலையாக வளாகங்களின் பராமரிப்பாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் சம்மன்கள் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.