புத்ரா ஜெயா: தென்னாப்பிரிக்கா, மொரிஷியசின் ரோட்ரிக் தீவுகளில் கண்டெடுக்கப்பட்ட விமானப் பகுதிகள் கண்டிப்பாக மலேசியாவின் எம்எச்370 விமானத்தின் பாகங்கள்தான் என்று மலேசியா வின் போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய் கூறியுள்ளார். கிடைக்கப்பெற்ற இரண்டு விமான இயந்திர பாகங்களிலும் ரோல்ஸ் ரோய்ஸ் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. மலேசியாவின் பாதுகாப்புச் சோதனைக் குழு, "அவை உறுதி யாக எம்எச்370 விமானத்தின் பாகங்கள்தான்," என்று கூறி உள்ளது. "ஆஸ்திரேலியாவின் போக்கு வரத்துப் பாதுகாப்புப் பிரிவுக்கும் போயிங் நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
"மொசாம்பிக், மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டு அரசாங்கங்களின் ஒத்துழைப்புக்கும் நன்றி," என்று அமைச்சர் லியோ தியோங் லாய் கூறினார். 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மொத்தம் 239 பேருடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சிறிது நேரத்தில் மாய மாய் மறைந்தது. அப்போதிலிருந்து அந்த விமானத்தைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் விமானத் தைத் தேடும் பணியில் இணைந்தன. இதுவரை 105,000 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் தேடல் பணி முடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் கிழக்கு ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் கடற்கரையோரம், மொசெல் வளைகுடாவுக்கு அருகில் கிளிய்ன் பிராக் ஆற்றை ஒட்டி கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகம் (படம்) மலேசியாவின் எம்எச்370 விமானத்தினுடையது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி