கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் சந்தித்துப் பேசியிருப்பது கட்சியின் ஒன்றுமைக்கு வழிவகுக்கும் என்று கெஅடிலான் கட்சித் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த சந்திப்பு கட்சியில் ஒற்றுமைக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் அதனால் ஒற்றுமை யின்மை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே பிகேஆர் இளைஞர்களின் விருப்பமாகும் என்றும் கட்சியின் இளைஞர் அணியின் துணைத் தலைவர் அபிப் பஹார்தின் கூறியுள்ளார்.
மகாதீர்- அன்வார் சந்திப்பு கெஅடிலான் கட்சி உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தலாம் என்றும் அதிருப்தி அடைந்த உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறக் கூடும் என்று கூறியதைத் தொடர்ந்து அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.