நியூயார்க்: அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமாவும் சீனப் பிரதமர் லி கெக் கியாங்கும் ஒன்றிணைந்து வடகொரியாவின் அணுவுாயுதச் சோதனைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் இணைந்து போராட இணக்கம் கண்டுள்ளனர். இதனை வெள்ளை மாளிகை நேற்று தெரிவித்தது. வடகொரியா மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் எந்திரத்துடன் கூடிய ஏவுகணைச்சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. சோகா துணைக்கோளம் பாய்ச்சும் தளத்தில் இருந்து நடத்தப்பட்ட இந்தச் சோதனையை அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் பார்வையிட்டார். இந்தச்சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதையடுத்து அவர் உயர்மட்ட அதிகாரிகள், விஞ்ஞானிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோரை அழைத்து கிம் பாராட்டினார். வெகுவிரைவில் துணைக்கோளத்தை விண்ணில் பாய்ச்சுவதற்குத் தயாராகுங்கள் என்று அவர்களுக்கு கிம் கட்டளை பிறப்பித்ததாக அந்நாட்டின் கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
வடகொரியாவில் செப்டம்பர் 10ஆம் தேதி நடத்தப்பட்ட சக்தி வாய்ந்த ஏவுகணைச் சோதனை வெற்றியளித்துள்ளதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அந்நாட்டுத்தலைவர் கிம் ஜோங் உன். படம்: ராய்ட்டர்ஸ்