வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் சீனா கூட்டு

நியூயார்க்: அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமாவும் சீனப் பிரதமர் லி கெக் கியாங்கும் ஒன்றிணைந்து வடகொரியாவின் அணுவுாயுதச் சோதனைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் இணைந்து போராட இணக்கம் கண்டுள்ளனர். இதனை வெள்ளை மாளிகை நேற்று தெரிவித்தது. வடகொரியா மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் எந்திரத்துடன் கூடிய ஏவுகணைச்சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. சோகா துணைக்கோளம் பாய்ச்சும் தளத்தில் இருந்து நடத்தப்பட்ட இந்தச் சோதனையை அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் பார்வையிட்டார். இந்தச்சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதையடுத்து அவர் உயர்மட்ட அதிகாரிகள், விஞ்ஞானிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோரை அழைத்து கிம் பாராட்டினார். வெகுவிரைவில் துணைக்கோளத்தை விண்ணில் பாய்ச்சுவதற்குத் தயாராகுங்கள் என்று அவர்களுக்கு கிம் கட்டளை பிறப்பித்ததாக அந்நாட்டின் கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

வடகொரியாவில் செப்டம்பர் 10ஆம் தேதி நடத்தப்பட்ட சக்தி வாய்ந்த ஏவுகணைச் சோதனை வெற்றியளித்துள்ளதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அந்நாட்டுத்தலைவர் கிம் ஜோங் உன். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!