தென்கொரியாவிலிருந்து அமெரிக்க வீரர்களை மீட்டுக்கொள்ளும் திட்டமில்லை

சோல்: தென்கொரியாவிலிருந்து அமெரிக்க வீரர்கள் சுமார் 4,000 பேரை மீட்டுக்கொள்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தென்கொரிய நாளேடு வெளியிட்ட தகவலை அமெரிக்க தற்காப்பு அமைச்சு மறுத்துள்ளது.

வடகொரியாவின் மிரட்டலிலிருந்து தென்கொரியாவைப் பாதுகாக்க சுமார் 28,000 அமெரிக்க வீரர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். அவர்களில் 4,000 வீரர்களை திரும்ப அழைத்துக்கொள்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தென்கொரிய நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அந்த செய்தி உண்மையல்ல என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சர் மார்க் எஸ்பர், தென்கொரியாவிலிருந்து அமெரிக்க வீரர்களை மீட்டுக்கொள்ளும் திட்டம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று கூறியிருந்தார்.

தென்கொரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க வீரர்களுக்கு ஆகும் செலவுக்கு தென்கொரிய அரசாங்கம் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அது தொடர்பில் தென்கொரிய அதிகாரிகளுடன் அமெரிக்கா சென்ற வாரம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் தென்கொரியாவிலிருந்து அமெரிக்க வீரர்களை மீட்டுக் கொள்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தென்கொரிய நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. அதனை பென்டகன் மறுத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!