தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள வடகொரியா

சோல்: கிருமிப் பரவல் அச்சம் காரணமாக வடகொரியா கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ ஊடகமான கேசிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

கிருமித்தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் தென்கொரியாவில் இருந்து வடகொரியாவிற்குள் தப்பியோடிவிட்டார். எனவே, வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அவசரகால நிலையை அறிவித்தார். மேலும் கசோங் எல்லை நகரம் முடக்கப்பட்டது.

இந்நிலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள், குறிப்பிட்ட பகுதி மக்களைப் பரிசோதனையிடுவது, சோதனை கருவிகள், பாதுகாப்பு உடைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூலை 16ஆம் தேதி வரை வடகொரியா மேற்கொண்ட 1,211 கிருமித்தொற்று பரிசோதனைகளிலும் தொற்று இல்லை என்று முடிவு வந்ததாக வடகொரியா அறிக்கை அளித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு ராய்ட்டர்சுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் சுமார் 696 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!