சிங்கப்பூர் வங்கிகளுக்கு, நிதிச் சந்தைக்கு தேவையான திறனா ளர்களை வெளிநாடுகளி லிருந்து தருவிப்பதில் நிலவும் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது. வெளிநாடுகளிலிருந்து திறன் வாய்ந்த நிபுணர்களைத் தருவிப் பதில் மற்ற நாடுகளுடன் மேலும் மேலும் கடுமையாகப் போட்டி போட வேண்டியுள்ளதாக நிதித் துறையைச் சார்ந்த தலைமை அதிகாரிகளில் 75 விழுக்காட்டினர் கூறுவதை ஆட்சேர்ப்பு நிறுவன மான ராபர்ட் ஹாஃப் மேற்கோள் காட்டியுள்ளது.
இது திறன்வாய்ந்த ஊழியர் களின் பற்றாக்குறை நிலையை மேலும் கடினமாக்குவதாகவும் இத்தகைய சூழல் நடுத்தர நிறு வனங்களையே அதிகம் பாதிப் பதாகவும் நடுத்தர நிறுவனங் களைச் சேர்ந்த 94 விழுக்காடு நிதித் துறை தலைமை அதிகாரி கள் கூறியதாக ஆய்வு விளக்க மளிக்கிறது. மேலும், வெளிநாடு களிலிருந்து தருவிக்கப்படும் திறனாளர்களைப் பொறுத்தவரை ஊழியரணியில் குறைந்தது 10 விழுக்காட்டினரை வெளிநாடுகளி லிருந்து தருவிக்க எண்ணம் கொண்டுள்ளதாக ஆய்வில் பங்கேற்ற 44 விழுக்காட்டினர் தெரிவித்ததாக ஆய்வு சுட்டியது.