லண்டன்: 'பிரக்சிட்' திட்டம் குறித்த விரிவான விவரங்களுடன் பிரிட்டிஷ் பிரதமர் தெரெசா மே நாளை உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடிநுழைவுக் கட்டுப் பாடுகளை விதிக்க பிரிட்டன் விரும்புவதால் ஐரோப்பிய ஒன் றியத்தின் ஒற்றைச் சந்தையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கள் குறைந்துள்ளன. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் லிஸ்பன் ஒப்பந்தத்தில் உள்ள 50வது பிரி வைத் தொடங்குவதற்கு முன்பாக 'பிரெக்சிட்' பேச்சுவார்த்தைகளில் தமது உத்தி குறித்து ஏதும் கூறப்போவதில்லை என்று திரு வாட்டி மே கோடிகாட்டியுள்ளார்.
அந்தச் செயல்பாடு மார்ச் மாதத்துக்குள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும், குடிநுழைவுச் செயல் பாடுகள் மீதான கட்டுப்பாட்டை மீட்டு, நாட்டின் இறையாண்மை யைத் தக்கவைத்துக்கொள்வ துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மிகச் சிறந்த வர்த்தகத் தொடர்பை வைத்துக்கொள்ள விரும்புவதாக திருவாட்டி தெரெசா மே கூறி யுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற் றைச் சந்தைக் கொள்கை 1992 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒருங் கிணைப்பின் மீதான மாஸ்ட்ரிச் ஒப்பந்தத்திலிருந்து உருவானது. அதில் பொருட்கள், முதலீடு, மக்கள், சேவைகள் ஆகிய நான்கின் சுதந்திரமான இயக்கம் முக்கிய அம்சமாக உள்ளது.