பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய பறக்கும் டாக்சிகள் துபாயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நான்கு உந்து கருவிகளைக் கொண்ட 'குவாட்காப்டர்' எனப் படும் டிரோன்களின் பெரிய அளவிலான 'இகாங்' ரக வாகனமே இத்தகைய டாக்சி களாகப் பயன்படுத்தப்பட உள்ளன. பொழுதுபோக்கு டிரோன்களைத் தயாரித்து வந்த சீன நிறுவனம் ஒன்று இந்த விதமான வாகனங் களைத் தயாரிக்கிறது. பறக்கும் டாக்சி சேவை இவ்வாண்டு கோடைக்காலம் முதல் தொடங்க இருப்பதாக அண்மையில் நடைபெற்ற அனைத்துலக அரசாங்க உச்ச நிலை மாநாட்டில் துபாய் சாலைப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது. இந்த வகையான பறக்கும் டாக்சிகளில் ஒரு முறை மின்னேற்றப்பட்டால் 40 முதல் 50 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க லாம். 30 நிமிடப் பயணத்துக்குப் போதுமானதாக அந்த மின்னாற்றல் இருக்கும் என்று கூறப்பட்டது. இந்த 'இகாங்' ரக டாக்சிகள் சுமார் 100 கிலோகிராம் எடை வரை சுமந்து செல்லக்கூடும். ஆனால் பயணிகள் அதில் அமைந்திருக்கும் சிறிய இருக் கைக்குள் அமர்ந்திருக்க வேண்டியிருக்கும்.
‘டிரோன்’ ரக பறக்கும் டாக்சிகள் துபாயில் அறிமுகம்
26 Feb 2017 11:33 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Feb 2017 06:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!