திருச்சி: நெடுவாசல் போராட்டத் தில் கைது செய்யப்பட்ட பல்கலைக் கழக மாணவியின் ஆடைகளை அவிழ்த்து சோதனை நடத்திய தாகக் கூறப்படும் புகார் குறித்து ஆறு மாதத்தில் அறிக்கை அளிக்க தமிழக சிறைத்துறைக்கு மனித உரிமை ஆணையம் உத் தரவிட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவியான வளர்மதி, 23, சமூக விழிப்புணர்வு மாணவர் இயக் கத்தைச் சேர்ந்தவர்களுடன் நெடு வாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத் திற்கு எதிராக ஏப்ரல் 15ஆம் தேதி குளித்தலை ரயில் நிலை யத்தில் போராட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து வளர் மதியும் இதர ஆறு பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி, அரியலூர் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பின் அண்மையில் இவர்கள் பிணை யில் விடுவிக்கப்பட்டனர். திருச்சி பெண்கள் சிறையி லிருந்து வெளியே வந்த வளர்மதி, பெண் சிறைக்காவலர்கள் தம்மை தினமும் ஆறு முறை ஆடைகளை அவிழ்த்து சோதனை நடத்தியதாக புகார் தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு 'நாப்கின்' தராமல் சிறைக் காவலர்கள் கொடுமைப்படுத்தியதாகவும் இது குறித்து மனித உரிமை ஆணை யத்தில் புகார் அளிக்கப்போவதாக வும் அவர் கூறினார். ஆனால் வளர்மதியின் குற்றச் சாட்டுகள் அனைத்தும் பொய் என தமிழக சிறைத்துறை துணைத் தலைவர் ஜெயபாரதி மறுத் திருந்தார். இதற்கிடையே நேற்று முன் தினம் இவ்விவகாரம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பு அமைப்பைச் சேர்ந்த ஹென்றி டிஃபேன் என் பவர் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். அதில் "சிறைக் காவலில் இருப்பவர்கள் மரியாதை யுடன் நடத்தப்பட வேண்டும். பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு சிறையில் நடந்த கொடுமை வெட்கக்கேடானது.
பெண் சிறைக் காவலர்களால் அவர் கொடுமைப் படுத்தப்பட்டுள்ளார். "இது குறித்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி விஜயகுமார் திருச்சி பெண்கள் சிறையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்," எனத் தெரிவித்திருந் தார். இந்நிலையில், திருச்சி பெண் கள் சிறையில் பல்கலைக்கழக மாணவி வளர்மதியின் ஆடை களை அவிழ்த்து சோதனை செய் யப்பட்டதாக பத்திரிகைகளில் வந்த தகவல்களை அடிப்படை யாகக் கொண்டு கூறப்பட்ட புகார் மீது தமிழக சிறைத்துறை கூடுதல் டிஜிபி விசாரணை நடத்த வேண் டும் என்றும் இது தொடர்பான அறிக்கையை ஆறு மாதத்திற்குள் தாக்கல் செய்யவேண்டும் என்றும் மனித உரிமை ஆணையம் உத்தர விட்டுள்ளது.