தீவு விரைவுச்சாலையில் நேற்று முன்தினம் நடந்த விபத்து ஒன்றில் மோட்டார்சைக்கிளோட்டி படுகாயம் அடைந்தார். சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலை யில் இரவு 7 மணிக்கு நடந்த இந்த விபத்தில் கறுப்பு நிற கார் ஒன்று மோட்டார் சைக்கிளை மோதியது. மோதப்பட்ட மோட்டார் சைக்கிள் வலது பக்கத் தடத்திற் குத் தள்ளப்பட்டது. வலது பக்கத் தடத்தில் சென்றுகொண்டிருந்த வெள்ளை கார் ஒன்று மோட்டார் சைக்கிளோட்டி மீதும் அவரது வாக னத்தின் மீதும் ஏறிச் சென்றது. அப்போது அந்த காரில் இருந்து தீப்பொறிகள் கிளம்பியதா க வும் அந்த மோட்டார் சைக்கிளை கொஞ்ச தூரத்திற்கு அந்த கார் இழுத்துச் சென்றதாகவும் தெரிகிறது. விபத்தில் சிக்கிய 46 வயது மோட்டார்சைக்கிளோட்டி தேசிய பல்கலைக்கழக மருத்துவ மனை யில் சேர்க்கப்பட்டார். அவர் படு காயமடைந்துள்ளதாகவும் இப் போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
இன்னொரு சம்பவத்தில், நேற்று புக்கிட் தீமா விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் மண்டாய்க்குச் செல்லும் வழியில் மூன்று கார்கள் மோதிய இன் னொரு விபத்தில் 24 வயது மோட்டார்சைக்கிளோட்டி காய மடைந்தார். அவர் மருத்துவம னையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிலேத்தார் விரைவுச்சாலையில் மூன்று கார்கள், ஒரு மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி தனக்கு முன் சென்ற காரில் தூக்கியெறிப்பட்டார். படம்: ஷின்மின்