சிட்னி: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் விமான நிலையத்தி லிருந்து கோலாலம்பூருக்கு புதன் கிழமை புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH128 விமானத்தில் சென்ற பயணி ஒருவர் விடுத்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அந்த விமானம் மெல்பர்ன் நகருக்கு அவசரமாகத் திரும்பியது. அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தார். அத்துடன் அவர் விமானி அறைக்குள் செல்ல முயன்றதாகவும் கூறப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் சென்ற பயணிகள் அனைவரும் பதற்றம் அடைந்தனர். இருப்பினும் பயணிகளும் விமானச் சிப்பந்தி களும் சாதுரியமாகச் செயல்பட்டு அந்தப் பயணியை மடக்கிப் பிடித்த தாக ஆஸ்திரேலியப் போலிசார் கூறினர். பயணிகள் தாங்கள் அணிந்திருந்த இடைவார்களைப் பயன்படுத்தி அந்த நபரின் கையைக் கட்டியதாகவும் கூறப் பட்டது. வெடிகுண்டு புரளியைக் கிளப்பிவிட்ட நபரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள 25 வயது நபர் இலங்கையைச் சேர்ந்த வர் என்றும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மலேசிய விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை, பயணிகள் மடக்கிப்பிடித்து இடைவார்களால் அவரது கைகளைக் கட்டிப்போட்டனர். அந்த நபர் தரையில் விழுந்துகிடப்பதை சமூக வலைத்தளத்தில் வெளிவந்த புகைப்படம் காட்டுகிறது. படம்: சமூக ஊடகம்