சென்னை: தம்மால் யாருக்கும் வளைந்துகொடுத்துப் போக இய லாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் சில கருத்துகளைப் பதிவிட்டுள் ளார். கேரளாவில் பாலியல் தொல் லைக்கு ஆளான நடிகையின் பெயரை செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டதற்காக தாம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் விரும்பினால், அதற்குத் தயார் என அப்பதிவில் அவர் குறிப்பிட் டுள்ளார். பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன. அந்த நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண் டும், கலாசார சீரழிவுக்கு வித்தி டும் இந்நிகழ்ச்சியை வழிநடத்தும் நடிகர் கமலை கைது செய்ய வேண்டுமென இந்து மக்கள் கட்சி காவல்துறையில் புகார் அளித்துள் ளது.
இந்நிலையில் சென்னையில் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், கேரளாவில் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட நடிகையின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். இத் தகைய செயல்களுக்கு ஆளான வரின் பெயரை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம் என சிலர் கமலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி லலிதா குமாரமங்கலமும் தமது செயல்பாட் டுக்காக கமல் மன்னிப்பு கேட்க வேண்டும், அல்லது அந்தச் சம் பவம் தொடர்பாக தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வேண்டு மென வலியுறுத்தினார். இது தொடர்பாக சமூக வலைத்தளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ள கமல், கடவுளைத் தவிர சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் கள் யாரும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
"நான் பெண்களை நேசிப்பவன், அவர்களின் உரிமைக்காகப் போராடுபவன். நான் யாருக்காகவும் வளைந்து கொடுப்பவன் அல்ல. குற்றவாளிகளை விட்டுவிட்டு வழக்கறிஞரைத் தண்டிப்பது போல் உள்ளது. "அந்த நடிகையின் பெயரைக் கூறக் கூடாதா? என் தாய்க்கும், மகளுக்கும் அடுத்தபடியாகவே அவரது பெயரைக் குறிப்பிட்டேன். இந்தப் போர் நடைபெறும்," என்று கமல் அந்தப் பதிவில் கூறியுள்ளார். இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதைப் புதிய தமிழகம் கட்சி கண்டித்துள்ளது.