மார்பக புற்றுநோய் பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்துவது முக்கியம் என்பதைப் பெண்கள் புரிந்துகொள்ளும்படி செய்தவதற்காக மாதர்கள் 33 பேர் மோட்டார் சைக்கிள்களில் தீவு முழுவதும் வலம் வந்தனர். இளஞ்சிவப்பு நிற உடையுடன் அவர்கள் ஒரு சாதனை படைத்தனர். 21வது மார்பக புற்றுநோய் மாதம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. சிங்கப்பூர் புற்றுநோய் தடுப்புச் சங்கம் ஏற்பாட்டில் முதலாவது இளஞ்சிவப்பு நாடா அணிவகுப்பு நடந்தது. அதில் 33 பெண்கள் தொண்டூழியர்களாக மோட்டார் சைக்கிளில் கலந்துகொண்டு தீவு முழுவதும் 31 கி.மீ. வலம் வந்தனர். 'அவர் தெம்பனிஸ் ஹப்பில்' தொடங்கி 6 மணி நேரம் கழித்து தோ பாயோ ஹப்பில் அவர்களின் பயணம் முடிவடைந்தது. சிங்கப்பூரின் ஆகப் பெரிய மாதர் மோட்டார் சைக்கிள் பவனி என்ற சாதனையையும் அவர்கள் படைத்தார்கள். இளஞ்சிவப்பு நாடா தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சர் ஜோசஃபின் டியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மார்பக புற்றுநோய் புரிந்துணர்வு மேம்பட மாதர்கள் மோட்டார் சைக்கிள் பவனி
2 Oct 2017 08:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Oct 2017 08:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!