கோல்கத்தா: மனநோயாளி ஒரு வர் அவ்வப்போது °விழுங்கிய ஆணிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. மேற்கு வங்காள மாநிலம் கோபர்க்தங்கா பகுதியைச் சேர்ந்த 48 வயதான மனநோயாளி ஒருவர் கடந்த சில தினங்களாக தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அடிக்கடி வாந்தியும் எடுத்து உள்ளார். இதையடுத்து அவரை கோல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த் தனர்.
அவரைப் பரிசோதனை செய்து பார்த்தபோது வயிற்றினுள் சிறிய தும் பெரியதுமான நிறைய ஆணி கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து அந்த ஆணிகள் அகற்றப் பட்டன. இதுபற்றி மருத்துவர் சித் தார்த்த பிஸ்வாஸ் கூறு கையில், "இந்த மனநோயாளி அடிக்கடி ஆணிகளை விழுங்கி உள்ளார். அந்த ஆணிகள் குடல் பகுதியில் தேங்கி உபாதையை ஏற்படுத்தி உள்ளன. "எண்டோஸ்கோபி எடுத்துப் பார்த்தபோது இதனைக் கண்டு பிடித்தோம். இதையடுத்து அறுவை சிகிச் சையின் போது குடல் பகுதியில் சிக்கியிருந்த ஆணிகளைக் காந் தம் மூலம் வெளியேற்றினோம். இதனால் பெரிய அளவில் இரைப் பைக்குச் சேதம் ஏற்படவில்லை," என்று கூறினார்.