இரவு முழுவதும் மின்னேற்றப்பட்ட மின்-ஸ்கூட்டர் ஒன்றில் தீப்பற்றி யதால் பாதிக்கப்பட்ட நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். யீஷூன் ஸ்திரீட் 22வில் அமைந்துள்ள புளோக் 260ன் 10வது மாடியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இது குறித்து காலை 10.40 மணியளவில் தகவல் பெற்றதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தண்ணீர் கொண்டு தீ அணைக்கப்பட்ட தாகவும் அது குறிப்பிட்டது. அந்த வீட்டில் 29க்கும் 59க்கும் இடைப்பட்ட வயதுடைய மூவர் இருந்தனர். பலத்த வெடிச் சத்தம் கேட்டு படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்த 23 வயது ஆடவர் கண் விழித்ததாக லியன்ஹ வான்பாவ் சீன நாளிதழ் குறிப்பிட் டது.
பயந்துபோன அவர், படுக்கை அறை சன்னலை உடைத்து ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச் சாலை யில் நேற்றுக் காலை வெள்ளை நிற மெர்சடீஸ் பென்ஸ் கார் சாலை யின் மத்தியில் உள்ள பூந்தொட்டி களின் மீது தலைகீழாகக் கவிழ்ந்த தில் இருவர் காயமடைந்துள்ளனர். சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் பாதையில் ஒரு டாக்சியும் காரும் சம்பந்தப்பட்ட இந்த விபத்து பற்றி போலிசாரிடம் காலை 5.20 மணிக் குத் தெரிவிக்கப்பட்டது. ஸில்லின் அவென்யூவுக்கு அருகில் உள்ள வெளிச்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. சம்பவ இடத்திற்கு உடனடியாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அவசர மருத்துவ வாகனத்தை அனுப்பினர். டாக்சி ஓட்டுநரான 57 வயது மாதுவும் மெர்சடீஸ் பென்ஸ் காரில் பயணம் செய்த 42 வயது மாதுவும் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. தப்பித்தார்.