இந்தியாவில் சென்ற ஆண்டை விட இவ்வாண்டு எச்1என்1 காய்ச்சல் பாதிப்பு இருபது மடங் கிற்கு மேல் அதிகரித்துள்ளதாக சுகாதார, குடும்ப நல்வாழ்வு அமைச்சின் அறிக்கை கூறுகிறது. கடந்த 2010 முதல் 2017 அக்டோபர் மாதம் வரை எச்1என்1 காய்ச்சலால் 8,543 பேர் மரணம் அடைந்தனர். அந்த அறிக்கையில், மாநில வாரியாக எச்1என்1 பாதிப்பு பட்டி யலிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மாக, கடந்த ஏழு ஆண்டுகளில் 114,000 பேர் எச்1என்1 காய்ச்ச லால் பாதிக்கப்பட்டனர். மகாராஷ்டிர மாநிலம்தான் அக்காய்ச்சலால் ஆக மோசமாக பாதிக்கப்பட்டது. அம்மாநிலத் தில் 23,812 பேர் எச்1என்1 காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 716 பேர் உயிரிழந் தனர்.
குஜராத் (18,206 சம்பவங்கள், 431 மரணங்கள்), ராஜஸ்தான் (13,158 சம்பவங்கள், 235 மரணங் கள்) ஆகியவை அடுத்த இரு நிலைகளைப் பிடித்தன. இப்படி எச்1என்1 காய்ச்சல் பல மாநிலங்களை உலுக்கியபோதும் சிக்கிம், லட்சத்தீவு ஆகிய பகுதி களை மட்டும் அது அண்டவே இல்லை என்பது வியப்பளிப்பதாக உள்ளது. அதுபோல, மேகாலயா, நாக லாந்து, மிஸே„ரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும் இந்த ஆண்டு ஒருவர்கூட எச்1என்1 காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை. 2016ல் நாடு முழுவதும் 1,786 பேரை எச்1என்1 காய்ச்சல் தாக் கியது. இவ்வாண்டு அது ஏற்கெ னவே 37,848ஐ எட்டிவிட்டது. கடந்த ஏழு ஆண்டுகளில் 2015ல்தான் எச்1என்1 காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. அவ்வாண்டில் எச்1என்1 காய்ச்ச லால் 2,990 பேர் உயிரிழந்தனர். மேலும் 40,602 பேர் அக்காய்ச்ச லுக்காக சிகிச்சை பெற்றனர்.