போயஸ் தோட்டத்தில் சோதனை: தடயங்கள் சிக்கின

சசிகலா உறவினர்களின் வீடு கள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத் திய ஒருசில நாட்களுக்குள் அமரர் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட வேதா இல்லத் தில் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறையினர் சோதனை செய்துள்ளனர். அவர்கள் ஜெயலலிதாவுக்கு வந்த கடி தங்கள், ஒரு மடிக்கணினி, ஒரு கணினி, சில 'பென் டிரைவ்'களை எடுத்துச் சென்றதாகத் தகவல் கள் தெரிவிக்கின்றன. அவற்றில் இருக்கும் தகவல்களின் அடிப் படையில் அடுத்தகட்ட நட வடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு பெண் அதிகாரி உட்பட மூன்று அதிகாரிகள் மட்டும் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வேதா இல்லத்துக்கு சோதனைக்காகச் சென்றபோது அங்கு வழக்கமாகக் காவல் புரியும் இரண்டு காவலர்கள் மட்டுமே இருந்தனர். மிக ரகசியமாக நடத்தப்பட்ட இந்தச் சோதனைக்கு உயர்நீதி மன்றத்திடம் ஏற்கெனவே அனு மதி பெறப்பட்டதாகக் கூறப் பட்டது. இம்மாதம் 9 முதல் 13ஆம் தேதி வரை சசிகலா உறவினர் களிடம் நடத்தப்பட்ட சோதனை களில் கிடைத்த ஆதாரங்களின் தொடர்பில் போயஸ் தோட்டத்தில் சோதனை செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரி வித்ததாக விகடன் இணையப் பக்கத் தகவல் தெரிவிக்கிறது.

வேதா இல்லத்தில் வருமான வரித் துறையினர் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தியபோது போயஸ் தோட்டத்தின் முன்பு திரண்ட தினகரன் ஆதரவாளர்கள் மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அவர்களைக் கட்டுப்படுத்த முயன்ற போலிசார் அனைவரையும் கைது செய்தனர். படம்: சதீஷ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!