சவூதியிலிருந்து வெளியேறிய லெபனான் பிரதமர் பிரான்ஸ் சென்றார்

பெய்ருட்: சவூதி அரேபியாவில் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்ட லெபனான் பிரதமர் சாட் ஹரிரி, தற்போது அங்கிருந்து வெளியேறி பிரான்சிற்கு புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் கூறின. திரு ஹரிரியும் அவரது மனைவியும் பாரிசில் பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோனை சந்திக்கவுள்ளனர். வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு சவூதிக்கு சென்றிருந்த திரு ஹரிரி சவூதி அதிகாரிகளால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக சவூதியில் இருந்தபடியே திரு ஹரிரி அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு லெபனான் நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில் திரு ஹரிரி சவூதியிலிருந்து வெளியேறி பிரான்ஸ் சென்றுள்ளார். திரு ஹரிரி பிரான்ஸ் வருவதற்கு பிரெஞ்சு அதிபர் அழைப்பு விடுத்தபோதிலும் அவருக்கு அரசியல் அடைக்கலம் எதுவும் பிரான்ஸ் வழங்கவில்லை என்று அதிபர் இமானுவல் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!