பெய்ருட்: சவூதி அரேபியாவில் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்ட லெபனான் பிரதமர் சாட் ஹரிரி, தற்போது அங்கிருந்து வெளியேறி பிரான்சிற்கு புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் கூறின. திரு ஹரிரியும் அவரது மனைவியும் பாரிசில் பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோனை சந்திக்கவுள்ளனர். வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு சவூதிக்கு சென்றிருந்த திரு ஹரிரி சவூதி அதிகாரிகளால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக சவூதியில் இருந்தபடியே திரு ஹரிரி அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு லெபனான் நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில் திரு ஹரிரி சவூதியிலிருந்து வெளியேறி பிரான்ஸ் சென்றுள்ளார். திரு ஹரிரி பிரான்ஸ் வருவதற்கு பிரெஞ்சு அதிபர் அழைப்பு விடுத்தபோதிலும் அவருக்கு அரசியல் அடைக்கலம் எதுவும் பிரான்ஸ் வழங்கவில்லை என்று அதிபர் இமானுவல் கூறியுள்ளார்.