நான்கு ஆடவர்கள் மீது நேற்று தனித்தனியாக மானபங்க குற்றச் சாட்டு சுமத்தப்பட்டது. அவர்கள் 2016 செப்டம்பருக்கும் 2017 ஜூன் மாதத்திற்கும் இடையில் இந்தக் குற்றச்செயல்களைச் புரிந்தனர் என்று கூறப்படுகிறது. அந்த நால்வரில் ஒருவரான கெல்வின் டியூக் ஜெயகுமார், 33, என்பவர் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். இவர் 2016 செப்டம்பர் 8ஆம் தேதி காலை 6.20 மணிக்கு 'நாட்டி கேர்ள் கிளப்பில்' 22 வயது மாதை இரண்டு தடவை மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆர்ச்சர்ட் டவர்ஸில் இருக் கும் இந்த கிளப்புக்கு வெளியே இருந்தபோது போலிஸ் அதிகாரி களை இவர் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் கூறுகின்றன. தங்ளின் போலிஸ் நிலையத் திற்கு காரில் சென்றபோது ஒரு போலிஸ் அதிகாரியை இவர் தவறாக நடத்தியதாக ஐந்தாவது குற்றச்சாட்டு கூறுகிறது. ஜெயகுமார் டிசம்பர் 15ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாவார். குற்றம் சுமத்தப்பட்ட கேரி டான் கும் வெங், 49, என்ற ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொள்ள முடிவு செய்து இருக்கிறார். இவர் குறும்புத்தனம் செய்ததாகக் கூறும் குற்றச்சாட்டையும் எதிர்நோக்கு கிறார். பிளாசா சிங்கப்பூராவில் சென்ற ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி 34 வயது பெண்ணை இவர் மான பங்கம் செய்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. டிசம்பர் 22ஆம் தேதி இவருடைய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.