செந்தோசா கேட்வேயில் 5 பேர் கைது

செந்தோசா கேட்வே பகுதியில் இருக்கும் பொதுப் பொழுதுபோக்கு நிலையங்களில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகளின் விளைவாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பொதுப் பொழுதுபோக்கு உரிமம் தொடர்பான நிபந்தனைகள் ஏதாவது மீறப்பட்டிருக்கிறதா என்பதைச் சோதிக்க கிளமெண்டி போலிஸ் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். 125 பேர் சோதிக்கப்பட்டனர். ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதற்காக மூன்று பேரும் சட்டவிரோத கும்பலில் சேர்ந்து இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட இரண்டு பேரும் கைதுசெய்யப்பட்டார்கள். இதனிடையே, தெலுக் பிளாங்கா ரோட்டுப் பகுதியில் போக்குவரத்து போலிஸ் சாலைத் தடுப்புகளை அமைத்து மோட்டார் ஓட்டுநர்களைச் சோதித்தது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக ஆடவர் ஒருவரும் ஒரு மாதும் கைது செய்யப்பட்டனர். புலன்விசாரணை தொடர்கிறது.

சட்டவிரோத கும்பலில் சேர்ந்திருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட இருவர் கைதுசெய்யப்பட்டனர். ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதற்காக போலிஸ் மூன்று பேரை கைதுசெய்தது. படம்: சிங்கப்பூர் போலிஸ் படை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!