வீ. பழனிச்சாமி
யீஷூன் அவென்யூ 3ல் உள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய நிர் வாகக் குழுவின் தலைவர் திருமதி கல்யாணி ராமசாமி நேற்று முன் தினம் காலமானார். அதனை முன்னிட்டு, ஆலயம் நேற்று முன்தினம் மாலை நேரம் முதல் நேற்று முழுமையும் மூடப்பட் டிருக்கும் என்றும் இன்று (டிசம்பர் 9ஆம் தேதி) காலையில் வழக்கம் போல திறக்கப்படும் என்றும் ஆல யம் தெரிவித்து, அந்தச் செய்தி யைக் கூறும் அறிவிப்புப் பலகையை ஆலயம் தனது வாயிற்கதவில் மாட்டியிருந்தது. ஆலயம் மூடப்பபடும் செய்தி காட்டுத் தீ போல சமூக ஊடகங்க ளில் நேற்று முன்தினம் முதலே பரவத் தொடங்கியது. இச்செய்தி யைக் கேட்டு பலர் கண்டனக்குரல் எழுப்பினர்.
அவர்களில் ஒருவரான சிங்கப் பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஓய்வுபெற்ற கர்னல் திரு என். சுபாஷ், 61, "ஒரு தனிநபரின் மர ணத்துக்காக பொதுமக்கள் செல் லும் ஆலயத்தை மூடுவதா? யாரும் தெய்வத்தைவிட பெரியவர்கள் அல் லர். மறைந்த தங்கள் தலைவரின் பங்களிப்புக்கும் செயல்பாட்டுக்கும் மரியாதை செலுத்த ஆலயம் மற்ற வழிகளை நாடியிருக்கலாம். அதை பக்தர்களுக்கு இடையூறு விளை விக்காமல் செய்திருக்கலாம்," என்று தெரிவித்தார். நிர்வாக உதவியாளராகப் பணி யாற்றும் 54 வயது திருமதி கோமதி அன்பழகன், "மறைந்த ஆலயத்தின் தலைவரும் நம்மைப் போல ஒரு மனிதர்தான். இதை ஒரு காரண மாக வைத்து கோயில் நிர்வாகத் தினர் இரு நாட்களுக்கு கோயிலை மூடியதை ஏற்றுக்கொள்ள முடிய வில்லை," என்றார். பகுதிநேரப் பயிற்றுவிப்பாள ரான 46 வயது திரு எம்.குமரன், "நேற்றுக் காலை 7 மணிக்கு அந்தக் கோயிலைத் தாண்டி சென்ற போது, அது மூடியிருந்ததைப் பார்த் தேன். ஆலயத் தலைவரின் மறை வுக்காக ஆலயத்தையே மூடுவதை இப்போதுதான் பார்க்கிறேன்," என்று கூறினார்.
மூடப்பட்ட ஆலய வாயிற்கதவில் அறிவிப்பு ஒன்று மாட்டப்பட்டுள் ளது "நமது ஆலயத்தின் தலைவர் பாசத்திற்குரிய அம்மா அவர்கள் ஸ்ரீமஹா மாரியம்மன் திருவடியை அடைந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இன்று (07.12.2017) மாலையும் நாளை (08.12.2017) வெள்ளிக்கிழமை முழுவதுமாக ஆலயம் நடை சாத்தப்பட்டிருக்கும். சனிக்கிழமை (09.12.2017) காலை முதல் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும்," என்று அதில் எழுதப்பட்டிருந்தது. படம்: ஹரிணி