இம்மாதம் 25ஆம் தேதியன்று தொழில்நுட்பக் கோளாற்றால் நிறுத்தப்பட்ட சிங்கப்பூர் ராட்டினத் தின் சவாரிகள் நேற்று வரை இயங்கவில்லை. அது எப்போது வழக்கநிலைக்குத் திரும்பும் என்று உறுதியாகக் தெரியவில்லை. "ராட்டினத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அது மீண் டும் எப்போது செயல்படும் என்பது குறித்த தகவல்களை எங்கள் இணையப் பக்கத்தில் தெரியப்படுத் துவோம்," என்று சிங்கப்பூர் ராட்டி னத்தை நிர்வகிக்கும் 'ஸ்ட்ராக்கோ லெஷ்யர்' தெரிவித்தது.
ஜனவரி 31ஆம் தேதிக்குள் சிங்கப்பூர் ராட்டினம் திறக்கப்படும் என்று தன்னிடம் தெரிவிக்கப்பட்ட தாக ஒரு சுற்றுலா நிறுவனம் கூறி யது. கோளாற்றைக் கண்டுபிடிக்க பொறியாளர்களைத் தேர்வு செய் யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது என்றும் அறியப்படு கிறது. இதற்கிடையே, ஜகார்த்தாவில் இருந்து வந்துள்ள சுற்றுப்பயணி களான எட்டு வயது அல்டாஃப் நோவ்ரியானி, பத்து வயது அல் டெய்வ் சகோதரர்கள் ராட்டினம் மூடப்பட்டிருப்பதைக் கண்டு ஏமாற் றம் அடைந்தனர்.
தொழில்நுட்பக் கோளாற்றால் சிங்கப்பூர் ராட்டினத்தின் சவாரிகள் இம்மாதம் 25ஆம் தேதியன்று நிறுத்தப்பட்டன. அங்கு ஏற்பட்ட கோளாறு குறித்து அதன் ஊழியர்கள் சோதனைகள் நடத்தி வருகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்