சிங்கப்பூர்: சிங்கப்பூர் தெம்பனிஸ் ரோவர்ஸ் காற்பந்துக் குழுவின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் அக்பர் நவாஸ் ஐ=லீக் குழுவான சென்னை சிட்டியின் பயிற்றுவிப் பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியாவின் ஐ=லீக் காற் பந்துத் தொடரின் முன்னணி குழுவான சென்னை சிட்டியுடன் ஈராண்டு ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ள அக்பர் நவாஸ், வரும் வெள்ளிக்கிழமை கோல்கத்தா வின் ஏடிகே குழுவை முதல் ஆட்டத்தில் எதிர்கொள்கிறார்.
இந்த வாய்ப்பு பற்றி ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "கடந்த ஆண்டு பிலிப்பீன்ஸ் நாட்டின் 'குளோபல் செபு' காற்பந்துக் குழுவிற்குப் பயிற்றுவிப்பாளராக இருந்தபோது, அக்குழுவை இறுதிப் போட்டி வரை முன்னேறச் செய்தேன். அதே போல் இந்தியா விலும் முத்திரை பதிப்பேன்," என்றார் அக்பர் நவாஸ். கடைசியாக கடந்த 2010ஆம் ஆண்டில் சிங்கப்பூர் லயன்ஸ் குழுவின் முன்னாள் பயிற்றுவிப் பாளர் வின்சென்ட் சுப்ரமணியன் இந்தியாவின் சர்ச்சில் பிரதர்ஸ் காற்பந்துக் குழுவிற்கு பயிற்று விப்பாளராக செயல்பட்டார்.
தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் அக்பர் நவாஸ் சென்னை சிட்டி காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.