ப.பாலசுப்பிரமணியம்
மண்டாய் தகனச்சாலையில் நேற்று முன்தினம் 70 வயது சிதம்பரம் முருகையா சுப்பிரமணியத்தின் இறுதிச் சடங்கை முடித்துவிட்டு நேற்றுக் காலை 8.30 மணிக்கு அஸ்தியைப் பெறச் சென்ற அவ ருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் பெற்ற அஸ்தி திரு சுப்பிரமணியத்தினுடையது அல்ல எனும் சந்தேகம் கிளம்பியதால் அஸ்தியைப் பெற அவர்கள் மறுத் தனர். ஆனால், அஸ்தி மாறவில்லை என உறுதியாகக் கூறிய தேசிய சுற்றுப்புற வாரியம், திரு சுப்பிர மணியத்தின் குடும்பத்தாரிடம் தொடர்பில் இருப்பதாகவும் தெரி வித்துள்ளது.
முன்னதாக, மண்டாய் தகனச் சாலை அஸ்தி நிலையத்தில் தாங்கள் பெற்ற அஸ்தியில் கதவுக் கீல் (hinge) ஒன்று இருந்தது என்றும் அது அஸ்தியில் இருப்ப தற்கு எந்தச் சாத்தியமும் இல்லை என்றும் திரு சுப்பிரமணியத்தின் குடும்பத்தார் தெரிவித்திருந்தனர். ஏனெனில் திரு சுப்பிரமணி யத்தின் நல்லுடல் இருந்த சவப் பெட்டியில் கீல் எதுவும் இல்லை என்றும் அவர்கள் கூறினர். இறுதிச் சடங்கிற்கு மூடியில் லாத சவப்பெட்டி பயன்படுத்தப் பட்ட நிலையில் அஸ்தியில் கீல் இருப்பது வியப்பைத் தருகிறது என்றார் திரு சுப்பிரமணியத்தின் தம்பி திரு முருகையா ரவி, 59. அந்த அஸ்தி திரு சுப்பிர மணியத்தினுடையதாக இருக்காது என்று அஸ்தி நிலைய அதிகாரி யிடம் அவர்கள் முறையிட்டனர். ஆனால் அதுதான் சரியான அஸ்தி என்று அதிகாரிகள் தொடர்ந்து கூறினர். எனினும், குடும்பத்தார் தங்கள் நிலைப்பாட் டில் உறுதியாக இருந்ததால் தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரி கள் இது குறித்து விசாரிக்க முடிவெடுத்தனர்.
மறைந்த தம் சகோதரர் திரு சிதம்பரம் முருகையா சுப்பிரமணியத்தின் (உள்படம்) அஸ்தியில் உலோகத் துண்டு இருப்பதைக் காட்டுகிறார் திரு முருகையா ரவி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்