மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ வாழ்ந்த 38 ஆக்ஸ்லி ரோடு இல்லத்தின் எதிர்காலம் குறித்து துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் தலை மையிலான அமைச்சர்நிலைக் குழு மூன்று தெரிவுகளை முன் வைத்துள்ளது. இது குறித்து 21 பக்க அறிக்கையை நேற்று வெளியிட்ட அமைச்சர்நிலைக் குழு, அந்த இல்லத்தை தேசிய நினைவுச் சின்னமாக்குவது, வீட்டின் கீழ்ப் பகுதியில் உள்ள வரலாற்று முக் கியத்துவம் வாய்ந்த உணவருந் தும் அறையைப் பாதுகாத்து, வீட்டின் எஞ்சிய பகுதிகளை இடித்துவிடுவது, மறுமேம்பாட்டுப் பணிகளுக்காக வீட்டை முழுவது மாக இடித்துவிடுவது ஆகிய தெரிவுகளை முன்வைத்துள்ளது. அந்த வீடு தேசிய நினைவுச் சின்னமாக்கப்படவேண்டும் என முடிவெடுக்கப்பட்டால், பாதுகாப்பு ஆணை வெளியிடப்பட்ட ஓர் ஆண்டிற்குள் அரசாங்கம் அதைக் கையகப்படுத்தவேண்டும்.
அந்த இல்லம், அமரர் லீயின் மரபைப் போற்றும்விதமாக குடிமை, சமுதாய நலன் சார்ந்த ஓர் இடமாக அல்லது ஒரு கல்வி நிலையமாக ஆக்கப்படலாம் என்றும் அது சுற்றியுள்ள குடி யிருப்பு வட்டாரத்திற்கு ஏற்புடை யதாக இருக்கும் என்றும் குழு தெரிவித்தது.
அமரர் லீ குவான் இயூ வாழ்ந்த 38 ஆக்ஸ்லி ரோடு இல்லம். கோப்புப்படம்