விமானத்தில் சிறுவனுக்கு மருத்துவ உதவியளித்த ஆயுதப்படை மருத்துவ அதிகாரி

பேங்காக்கில் விடுமுறை முடிந்து ஸ்கூட் விமானம் மூலம் ஆயுதப் படையின் மருத்துவ அதிகாரி ஒருவர் சிங்கப்பூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அதில் பய ணம் செய்த சிறுவன் மூச்சு விட சிரமப்பட்டபோது முன்வந்து மருத் துவ உதவி செய்தார். அச்செயலுக் காக அவர் பாராட்டப்பட்டுள்ளார். ஐம்பது வயதாகும் ஆயுதப்படை மருத்துவ அதிகாரி திரு தங்கராஜ் கிருஷ்ணசாமி விமானத்தில் பய ணம் செய்துகொண்டிருக்கும் போது, சிறுவன் ஒருவனுக்கு உதவும்படி ஒலிப்பெருக்கி மூலம் விமானச் சிப்பந்திகள் அழைப்பு விடுத்தனர். மார்ச் மாதம் 31ஆம் தேதி இரவு சுமார் 7.20 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது என்று பயணி ஒருவர் ஸ்டோம்ப் இணை யத்தளத்திடம் தெரிவித்தார்.

"அச்சிறுவன் மூச்சுவிட சிரமப் பட்டான். அப்போது ஆடவர் ஒரு வர் முன் வந்து அச்சிறுவனுக்கு மருத்துவ உதவி செய்தார்," என்று அப்பயணி கூறினார். திரு தங்கராஜ் அச்சிறுவனின் உடலைச் சோதித்து, அவனுக்கு உள்ள மருத்துவப் பிரச்சினை பற்றி அவனது பெற்றோரிடமிருந்து தெரிந்துகொண்டு, விமானம் தரை யிறங்கும் வரை அவனுடன் இருந்து அவனைக் கண்காணித் துக்கொண்டிருந்தார் என்று சிங்கப்பூர் ராணுவப் படையின் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட் டிருந்தது.

மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு உதவுவதை ஒரு பாக்கியமாகக் கருதவேண்டும் என்கிறார் சிங்கப்பூர் ஆயுதப்படை மருத்துவ அதிகாரி தங்கராஜ் கிருஷ்ணசாமி. படம்: STOMP, FACEBOOK/ THE SINGAPORE ARMY

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!