இந்திய ஊழியர்கள் இருவர் மோதல்; ஒருவர் காயம், மற்றொருவருக்குச் சிறை

ஓர் உணவகம் ஊழியர் ஒருவர் சிரித்ததால் சிரிப்புடன் தொடங்கிய சிறு சச்சரவு, கடைசியில் மோத லில் போய் முடிந்தது. ஒருவர் ஆயுதத் தால் தாக்கியதை அடுத்து வெளிநாட்டு ஊழியர் ஒருவர் முகத்தில் காயம் அடைந்தார். இந்தியாவை சேர்ந்த பாஸ்கர் பிரவீன், 26, என்பவருக்குக் காயம் விளைவித்ததாக கணேசன் தென்னரசு, 35, என்ற இந்திய நாட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண் டார். அதையடுத்து கணேசனுக்கு மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

துவாஸ் சவுத் அவென்யூ 1ல் இருக்கும் துவாஸ் வியூ ஊழியர் விடுதியில் உள்ள உணவகத் தில், சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி மாலை சுமார் 5.45 மணிக்குத் தன்னைப் பார்த்து கணேசன் சிரித்ததை பாஸ்கர் பார்த்தார். அதனால் பாஸ்கருக்கு கோபம் வந்துவிட்டது. கணேசனை எதிர்த் தார். கைகலப்பு மூண்டது. பிறகு இருவரும் பாதுகாவல் அதிகாரி கூடத்திற்குச் சென்றனர். அங் கிருந்த அதிகாரி அந்த இருவரை யும் எச்சரித்து உணவகத்தைவிட்டு வெளியே செல்லும்படி கூறினார். சிதம்பரம் சிரஞ்சீவி என்ற தன் நண்பருடன் பாஸ்கர் வெளியே போய்விட்டார். கணேசன் பின்புற மாகத் தொடர்ந்து வருவதை சிரஞ்சீவி பார்த்து, அது பற்றி பாஸ்கரிடம் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!