ஓர் உணவகம் ஊழியர் ஒருவர் சிரித்ததால் சிரிப்புடன் தொடங்கிய சிறு சச்சரவு, கடைசியில் மோத லில் போய் முடிந்தது. ஒருவர் ஆயுதத் தால் தாக்கியதை அடுத்து வெளிநாட்டு ஊழியர் ஒருவர் முகத்தில் காயம் அடைந்தார். இந்தியாவை சேர்ந்த பாஸ்கர் பிரவீன், 26, என்பவருக்குக் காயம் விளைவித்ததாக கணேசன் தென்னரசு, 35, என்ற இந்திய நாட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண் டார். அதையடுத்து கணேசனுக்கு மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
துவாஸ் சவுத் அவென்யூ 1ல் இருக்கும் துவாஸ் வியூ ஊழியர் விடுதியில் உள்ள உணவகத் தில், சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி மாலை சுமார் 5.45 மணிக்குத் தன்னைப் பார்த்து கணேசன் சிரித்ததை பாஸ்கர் பார்த்தார். அதனால் பாஸ்கருக்கு கோபம் வந்துவிட்டது. கணேசனை எதிர்த் தார். கைகலப்பு மூண்டது. பிறகு இருவரும் பாதுகாவல் அதிகாரி கூடத்திற்குச் சென்றனர். அங் கிருந்த அதிகாரி அந்த இருவரை யும் எச்சரித்து உணவகத்தைவிட்டு வெளியே செல்லும்படி கூறினார். சிதம்பரம் சிரஞ்சீவி என்ற தன் நண்பருடன் பாஸ்கர் வெளியே போய்விட்டார். கணேசன் பின்புற மாகத் தொடர்ந்து வருவதை சிரஞ்சீவி பார்த்து, அது பற்றி பாஸ்கரிடம் சொன்னார்.