40,000 பக்தர்கள் சூழ குடமுழுக்கு

தமிழவேல்

பிரதமர் லீ சியன் லூங், கோலாகலமாக நேற்று நடந்தேறிய சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் குடமுழுக்கு விழாவிற்கு வருகை அளித்து சிறப்பு சேர்த்தார். திரு லீ, கடந்த 2004ல் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் இந்து ஆலயத்தின் குடமுழுக்கு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வது இதுவே முதல் முறை. அதற்காக விழாவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதிலும் குடமுழுக்கு விழாவிற்கு வந்திருந்த 40,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மனநிறைவுடன் குடமுழுக்கைக் காணவும் ஆலயத்தினுள் சென்று வழிபடவும் 1,500 தொண்டூழியர்களின் உதவியுடன் சீரான, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் ராஜகோபுரத்திற்கும் மற்ற ஆலயக் கலசங் களுக்கும் காலை 10.50 மணியளவில் புனித நீர் ஊற்றப்பட்டது. கிட்டத்தட்ட 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயம், கடந்த 1978ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட $4.5 மில்லியன் செலவில் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண்ட ஆலயம் நேற்று 4வது குடமுழுக்கு விழாவைச் சிறப்பாக நடத்தியது.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் (இடமிருந்து) இந்து ஆலோசனை மன்றத் தலைவர் ராஜன் கிருஷ்ணன், பிரதமர் லீ சியன் லூங், இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் ஆர் ஜெயசந்திரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!