சிங்கப்பூர் ஆயுதப்படை தனது வீரர்களுக்கு புதிய மேம்படுத்தப் பட்ட சீருடையை அறிமுகப்படுத்தி யுள்ளது. கடுமையான பயிற்சியில் ஈடுபட்ட பின் வியர்வையால் நனைந்துபோகும் சீருடையை விரைவில் காய்ந்துவிடும் வகையிலும் பயிற்சியால் ஏற்படும் உடற்சூட்டைக் குறைக்கும் வகையிலும் இந்தப் புதிய சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சீருடை, உடற்சூட்டால் ஏற்படும் காயங்களைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.
முன்பு புழக்கத்தில் இருந்த நம்பர்4 என்றழைக்கப்படும் சீருடையின் முழுக்கைப் பகுதிகள் பச்சை வண்ணப் பனியனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தீப்பிடிக்காத செயற்கை நாரிழை யால் நெய்யப்பட்ட துணியாகும். நம்பர்4 சீருடையைக் காட்டிலும் 1.4 மடங்கு ஊடுருவும் தன் மையும் 1.6 மடங்கு விரைவில் காய்ந்துவிடும் தன்மையும் கொண் டது இப்புதிய சீருடை. எனவே தண்ணீர், காற்று, வியர்வை போன்றவை இந்தச் சீருடையில் தங்காது. காற்று உட்புகுந்து செல்லக்கூடியது என்பதால் பயிற்சியால் ஏற்படும் உடல்சூடு பரவலாக விரைவில் வெளியேறிவிடும்.
புதிய மேம்படுத்தப்படுத்தப்பட்ட சீருடையில் காட்சி தரும் ராணுவ வீரர் மூன்றாம் சார்ஜண்ட் ஸெங் ஸுடா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ்