சென்னை: வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வரப்படும் குற்றம் நிகழ்வதில் திருச்சி விமான நிலை யம் இந்தியாவிலேயே நான்காவது இடத்தில் உள்ளது. புதுடெல்லி, மும்பை, சென்னை அனைத்துலக விமான நிலையங்களுக்கு அடுத்த நிலையில் திருச்சி அனைத்துலக விமான நிலையத்தில் அதிகமான கடத்தல் தங்கம் பிடிபடுவதாக அதி காரிகள் குறிப்பிட்டுள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் வெளிநாடுகளிலி ருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 6.8 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கமும் ரூ.77.3 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள், மின்னணு சாதனங் கள் ஆகியனவும் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன.
அனைத்துலக விமான நிலை யம் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்த பின்னர் திருச்சி விமான நிலை யத்தில் பயணிகளின் எண்ணிக் கையும் விமானங்களின் எண்ணிக் கையும் பன்மடங்கு அதிகரித்து விட்டன. அதேபோல கடத்தல் சம் பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் 83 கடத்தல் வழக்குகள் இவ்விமான நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பெரும்பாலும் மலேசியா, சிங்கப் பூர், சார்ஜா, குவைத், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்குத் தங்கம் கடத்தி வரப்படுவதாகவும் இந்தக் கடத்தல் நடவடிக்கைகளுக்கு ஒரு சில சுங்கத் துறை அதிகாரிகளும் விமான நிலைய ஊழியர்களும் உடந்தையாக உள்ளதாகவும் பாது காப்புத் துறையினர் ஊடகங்களி டம் தெரிவித்தனர்.
திருச்சி அனைத்துலக விமான நிலையம். கோப்புப் படம்