கோவை: கோவை மாவட்டம் கோவைப்புதூரில் செயல்படும் 'அனாடமிக் தெரபி பவுண்டேஷன்' என்ற அமைப்பின் சார்பில் வீட்டி லேயே இயற்கை முறையில் சுகப் பிரசவம் பார்க்க பயிற்சி அளிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக் கப்பட்டன. கர்ப்பிணிப் பெண்கள் இதில் கலந்துகொள்ளலாம் என்றும் பரி சோதனையின்றி மருத்துவ மனைக்குச் செல்லாமலே சுகப்பிர சவத்துக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டது.
'சுகப் பிரசவம் ஒரு வரம்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதை யடுத்து பொதுமக்களை ஏமாற்றும் வழியில் செயல்படும் அந்த அமைப் பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார துணை இயக்குநர் பானுமதி போலிசில் புகார் அளித்தார். அதன்பேரில் குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே ஜான்சன் என்பவர், இந்த அமைப்பை நடத்தி வந்த 'ஹீலர்' பாஸ்கர், வயது 42, மேலாளர் சீனிவாசன், 32, ஆகி யோர் சுகப் பிரசவ முறை குறித்து ஆலோசனை வழங்குவதாகக் கூறி தன்னிடம் 5,000 ரூபாய் கேட்டு ஏமாற்ற முயற்சி செய்ததாக புகார் கூறினார். இந்தப் புகாரின் அடிப்படையில் 'ஹீலர்' பாஸ்கர், சீனிவாசன் ஆகி யோர் மீது மோசடி, குற்றம் செய் யும் முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். கைதான 'ஹீலர்' பாஸ்கர், சிவில் பொறியியலில் டிப்ளமா பட் டம் பெற்றவர். இவர் அக்குபஞ்சர் பயிற்சி பெற்றுள்ளதாகவும் கூறப் படுகிறது. தன்னைத் தானே மருத்துவர் என அறிவித்துக்கொண்ட 'ஹீலர்' பாஸ்கர், யுடியூப்பில் இயற்கை மருத்துவம், மூலிகை மருத்துவம், அக்குபஞ்சர் சிகிச்சை, யோகா பயற்சிகள் தொடர்பான காணொளி களை வெளியிட்டு பிரபலமானார்.
'ஹீலர்' பாஸ்கர், நிர்வாகி சீனிவாசன் ஆகியோரை போலிசார் அழைத்துச் செல்கின்றனர். படம்: தமிழக ஊடகம்