தான் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் மகளை 45 வயது அர்ஷாத் துல்லா மூன்று மாதங்களாகப் பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். கடந்த ஆண்டு மே 6ஆம் தேதியன்று அர்ஷாத் துக்குத் தன்னை மிகவும் பிடிக்கும் எனச் சிறுமி தன் தாயாரிடம் கூறியபோது ஆடவர் செய்த குற் றங்கள் யாவும் வெட்டவெளிச் சமாகின.
கூடுதல் வருமானத்திற்காக சிறுமியின் பெற்றோர் தங்கள் நான்கறை வீட்டிலுள்ள இரு அறை களை வாடகைக்கு விட்டிருந்தனர். 2012இலிருந்து அர்ஷாத் தங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்ததால் நீண்ட நாள் பழக்கம் காரணமாக சிறுமியின் குடும்பத் தினர் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அர்ஷாத் காகிதக் கப்பல், காகித விமானம், உணவு, பேனா என அந்த 8 வயது சிறுமி மீது பரிசு மழை பொழிந்து சிறுமியின் கை, கால், தோளைப் பிடித்துவிடத் தொடங்கினார். சிறுமி தன் தாயாரிடம் இதைப் பற்றி எதுவும் கூறாத நிலையில், மறு மாதம் அர்ஷாத் மேலும் எல்லை மீறிச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ய ஆரம்பித்தார்.
சக்கர நாற்காலியில் இருந்த சிறுமியின் தந்தை ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெறுபவர். அவர் எப்போ தும் வீட்டின் படுக்கை அறையி லேயே இருப்பார். இதனால் சிறுமி வீட்டுக் கூடத்திலோ சமையலறை யிலோ தனியாக இருந்தால், அத் தருணங்களைப் பயன்படுத்திக் கொண்டு சிறுமியை அர்ஷாத் பாலியல் பலாத்காரம் செய்தார். அர்ஷாத் செய்த குற்றத்தைப் பற்றி அறிந்ததும் சிறுமியின் தாயார் அர்ஷாத்தின் வேலை இடத்து முதலாளியுடன் தொடர்பு கொண்டதோடு உடனே வீட்டை விட்டுப் போகும்படியும் அர்ஷாத் திடம் கூறினார்.
அதற்கு மறுநாள், அர்ஷாத் தன்னிடம் செய்தவற்றைப் பற்றி நினைக்கும்போது தனக்குப் பயமாக இருப்பதாக சிறுமி தன் தாயாரிடம் கூறினார்.