ஜகார்த்தா: ஜாவா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கிய 'லயன் ஏர்' விமானத்தின் மிகவும் உறுதியான பாகங்கள்கூட உடைந்து சிதறியுள் ளன என்று இந்தோனீசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழு தெரிவித்தது. அக்டோபர் 29ஆம் தேதி ஜகார்த்தாவிலிருந்து பங்கல் பினாங்கை நோக்கி பறந்த விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் இறந்தனர். "கடல் மட்டத்தின் மீது விமானம் அதிவேகத்தில் மோதியதை விமானத்தின் உடைந்த பாகங்கள் காட்டுகின்றன," என்று இந்தோனீசிய தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவர் சோர்ஜான்டோ ஜாஜோனோ குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியிருக்கலாம் என்று நம்பப்பட்டது. "விமானம் நடுவானில் வெடித்துச் சிதறுவதற்கு வாய்ப்பில்லை. மோதும்போது விமானத் தின் இயந்திரம் அதிவேகத்தில் இயங்கியது," என்றார் அவர். கடந்த திங்கட்கிழமை அன்று விமானத்துறையைச் சேர்ந்த மூன்று நிபுணர்கள், விபத்துக் குள்ளான 'லயன் ஏர்' நிறுவனத் தின் 'போயிங் 737 மேக்ஸ் 8' விமானம் மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் கடலுக்குள் பாய்ந்திருக்கலாம் என்று கூறியிருந்தனர். ஆனால் இதுவரை இது உறுதிப்படுத்தப் படவில்லை.