மகிந்த ராஜபக்சேவுக்கு ஆதர வில்லை என்ற முடிவில் எந்த மாற்ற மும் இல்லை என்று இலங்கையின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். இலங்கை அதிபர் சிறிசேனாவின் அழைப்பை ஏற்று 6 எம்பிக்களுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசனும் 15 எம்பிக்களுடன் தேசிய தமிழ் கூட்டமைப்பு தலைவர் சம்மந்தனும் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தாம் எடுத்துள்ள முடிவுகளுக்கு கூட்டமைப்பின- ருக்கு சிறிசேன விளக்கம் அளித்து உள்ளார். அதைத் தொடர்ந்து நாடாளு மன்றத்தில் ராஜபக்சேவிற்கு ஆதர வளிக்கப்போவதில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சிகளின் ஆதர- வுடன் அரசியல் சூழ்நிலையை சுமுக நிலைக்குக் கொண்டு வருவதற்கு எதிர்காலத்தில் அதிபர் எடுக்கும் முடிவுகளுக்கு அவருடன் கலந்தாலோசித்து கூட்ட மைப்பு தனது முழுமையான ஆதரவைத் கொடுக்கும் என்று இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியது. இதற்கிடையே நாடாளுமன்றத் தில் பெரும்பான்மையை நிரூபிப்ப தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் மைத்திரி அரசாங்கம் நாடாளு மன்றத்தைக் கலைக்க வாய்ப்புள் ளதாக கொழும்புத் தகவல்கள் நேற்று தெரிவித்தன. நேற்று நள்ளிரவுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பத்திரிகை கடைசித் தகவல்கள் கூறின.
நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன இரு தரப்புகளும் பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், ஜனநாயகத்தை நிலை- நாட்ட வேண்டுமென்ற கோரிக் கையை அடிப்படையாகக் கொண்டு கட்சித் தலைவர்- களுடன் நடத் திய சந்திப்பில் சரியான பதில் கிடைக்காமை போன்றவற்றால் நாடாளுமன்- றத்தைக் கலைப்பதற் காக சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோ- சனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கூறின.