பெய்ஜிங்: 'ஜி20' உச்சநிலை மாநாட்டையொட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசவிருக்கின்றனர். இந்தச்சந்திப்பு சீனா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கியம் என்று சீன அரசாங்கத்தின் உயர்மட்ட தூதர் வாங் யி கூறியுள்ளார். இதற்கிடையே சீனாவுடன் புதிய வர்த்தக உடன்பாடு ஏற்படும் சாத்தி யம் உள்ளதாக திரு டிரம்ப் கூறினார். "சீனாவுடன் முயற்சி செய்து உடன்பாடு செய்து கொள்ள விரும்பு கிறோம். சீன அதிபர் ஸியுடன் நல்லு றவைப் பேண விரும்புகிறோம்," என்று திரு டிரம்ப் குறிப்பிட்டார். குடியரசுக் கட்சி அண்மையில் நடந்த இடைக்காலத்தேர்தலில் பிரதி நிதிகள் சபையின் பெரும்பான்மையை ஜனநாயகக் கட்சியிடம் இழந்த 1.5 மணி நேரத்துக்குப் பிறகு அதிபர் டிரம்ப் சீனாவுடனான உறவைப் பற்றி பேசியிருக்கிறார்.
ஆனால் குடியரசுக் கட்சி செனட் சபையில் தனது பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டது. செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அதிபர் டிரம்ப், அடுத்த ஆண்டு முற் பகுதியில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைச் சந்திக்கப் போவ தாகவும் தெரிவித்தார். இந்நிலையில் வடகொரியா தன் மீதுள்ள தடைகளை அகற்ற வேண்டு மானால் அதற்குரிய நடவடிக்கை களை அது எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "வடகொரியா விவகாரத்தில் அவ சரப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே தடைகள் அமலில் உள் ளன. வடகொரியாவின் ஏவுகணை களும் உந்துகணைகளும் தற்போது நின்றுவிட்டன," என்று அவர் கூறினார். இதற்கிடையே இடைத்தேர் தலில் புதிய பலம் பெற்றுள்ள ஜன நாயகக் கட்சியினர் வலியுறுத்தினாலும் தம்முடைய வருமான வரி விவரங்களை வெளியிடப்போவதில்லை என்று அதி பர் டிரம்ப் கூறியுள்ளார்.