சென்னை: தொழிலதிபரது மனைவி, மகளைக் கடத்திச் சென்று சிறை வைத்ததுடன், பாலி யல் பலாத்காரத்துக்கும் உட்படுத்தி யதாக எழுந்துள்ள புகாரின் பேரில் சதுர்வேதி என்ற சாமியாருக்கு காவல்துறை வலைவீசி உள்ளது. சென்னையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் என்ற பெயரில் அறக்கட் டளை நடத்தி வந்த சதுர்வேதி, தன்னை கிருஷ்ணனின் அவதாரம் என்று கூறி வந்தார். இவருக்கு ஏராளமான பக்தைகள் உள்ளனர். இவரது சொற்பொழிவுக்கும் ஆன்மீக உரைகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலை யில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தமக்கு தொழில் ரீதியிலான பிரச்சினைகள் அதிகம் இருப்பதாகவும், அவற் றைத் தீர்த்து வைக்குமாறும் சதுர் வேதியிடம் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி தொழிலதிபரின் வீட்டுக்குள் நுழைந்த சதுர்வேதி, சில பூசைகளை செய்துள்ளார். பிறகு நாளடைவில் அவ்வீட்டின் கீழ்த்தளம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகத் தெரிகிறது. மேலும், தொழிலதிபரின் மனைவி, மகளையும் அவர் வசியப் படுத்தியதாகவும், இதனால் கோப மடைந்த தொழிலதிபர் காவல்துறையை அணுக, அவரது மனைவி, மகளை ஆந்திராவுக்குக்கடத்திச் சென்றுவிட்டார் சதுர் வேதி.
அங்கு ஓரிடத்தில் இருவரையும் அடைத்து வைத்ததுடன், பாலியல் பலாத்காரமும் செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அந்தத் தொழிலதிபர் தனது மனைவியையும் மகளையும் மீட்டுத்தரும்படி, சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதன் பேரில் சதுர்வேதி மீது 18 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவாகியுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு அவர் கைதானார். இரு பெண்களும் மீட்கப்பட்டனர். எனி னும் பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு ஒத் துழைக்காமல் தலைமறைவாகி விட்ட சதுர்வேதி தேடப்படும் குற்ற வாளி என அறி விக்கப்பட்டுள்ளது. போலிஸ் அவருக்கு வலைவீசி உள்ளது.