ஆசியான் பங்காளித்துவ உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்க சீனப் பிரதமர் லி கெச்சியாங் நேற்று சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். இன்று தொடங்கும் ஆசியான் உச்சநிலை கூட்டத்திற்கு முன்பாக நேற்று அவர் சிங்கப்பூருக்கு அதி காரத்துவ வருகை மேற்கொண்டார். 2013ஆம் ஆண்டில் சீனாவின் பிரதமராகப் பதவியேற்ற பிறகு சிங்கப்பூருக்கு அவர் மேற் கொள்ளும் முதலாவது பயணம் இது. சாங்கி விமான நிலையத்தில் நேற்று மாலை வந்திறங்கியதும் திரு லி நேராக இஸ்தானாவுக்குப் புறப்பட்டார். அங்கு அவரை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் சடங்குபூர்வ மரியாதையுடன் வரவேற்றார்.
இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக உடன்பாட்டை பலப்படுத்தும் நோக் கத்தில் 11 புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தாவதைப் பார்வையிட்டனர். இந்த மேம்பட்ட தடையற்ற வர்த்தக உடன்பாட்டின் மூலம் முதலீட்டுப் பாதுகாப்பு, சுங்க நட வடிக்கைகள், வர்த்தக வசதிகள் போன்றவற்றை வலுப்படுத்தும். 2013ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் சிங்கப் பூரின் முன்னணி வெளிநாட்டு முதலீட்டு மையமாகவும் சீனா விளங்குகிறது என்பது குறிப் பிடத்தக்கது.