ஜோகூர் பள்ளியில் கத்திக்குத்து; இருவருக்கு வெட்டு; ஒருவர் மரணம்

ஜோகூர்: ஜோகூர் பள்ளி விழாவில் இரு ரகசிய குண்டர் கும்பலுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். மற்றொருவர் கத்திக்குத்து காயத்துடன் உயிர் தப்பினார். சம்பவத்தில் 21 வயது இளைய ரின் வலதுபக்க மார்பில் கத்திக் குத்து விழுந்தது. ரத்தம் வழிந்த நிலையில் பள்ளியின் முன்பக்க வாயிலை அவர் நெருங்கினார். ஆனால் மயங்கி விழுந்து அவர் மரணமடைந்தார்.

மற்றொரு 15 வயது இளையர் கத்திக்குத்து காயங்களுடன் சுல்தானா அமினா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் ஸ்கூடாய் எஸ்ஜேகேசி குவோ குவாங் பள்ளி யில் அறப்பணி விற்பனை விழா நடைபெற்றபோது இரு கும்பலுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக ஜோகூர் பாரு வடக்கு மாவட்ட போலிஸ் உதவி ஆணையர் முஹமட் தாயிப் அஹமட் சொன் னார். "பள்ளி விழாவில் கலந்துகொள் வதற்காக 21 வயது இளையரும் அவரது 15 வயது நண்பரும் மற்ற மூன்று நண்பர்களுடன் நுழைந்த போது எட்டுப் பேர் கொண்ட கும்பல் அவர்களை எதிர்கொண் டது. பின்னர் இரு கும்பலைச் சேர்ந்தவர்கள் சண்டையில் ஈடுபட் டனர்," என்றார் அவர்.

இரு குண்டர் கும்பலுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. படம்: யூடியூப் காணொளி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!